பக்கம் எண் :

மொழி123

     மதுரையில் வசிப்பவனால் இராமன் புத்திரனால் சுமுகனால்
இலட்சுமணனால் இது எழுதப்பட்டது.ழு
(மொழிநூல் - மாகறல் கார்த்திகேய முதலியார்.)

4. இலக்கண நூல்கள்

     அகத்தியர் தமிழுக்குச்* சிற்றகத்தியம் பேரகத்தியம் என்னும் இலக்கண நூல்கள் செய்தா ரென்ப. அவற்றுள் ஒன்றேனும் இக்காலத்துக் கிடைக்கவில்லை. சிதறுண்ட சூத்திரங்களெனச் சிலவற்றைத் தொகுத்து, ழுபேரகத்தியத்திரட்டுழு ஒன்று அச்சடித்திருக்கின்றனர். அச் சூத்திரங்களின் சொன்னடையும், பொருணடையும் நோக்கும் இளஞ் சிறாரும் அவை பண்டைத் தமிழன்று என்று துணிந்துகொள்வர். அகத்தியத்துக்கு முன் குமரம் என்னும் ஓர் இலக்கணம் இருந்ததாகக் கூறுப. பேராற்று நெடுந்துறையன் பெருநூல்களுள்ளும் இடைகழிச் செங்கோடன் இயனூல் முதலிய இலக்கணங்களும் இருந்து மறைந்துபோனதாகச் செங்கோன் தரைச்செலவு என்னும் நூலால் அறிகின்றோம். தொல்காப்பியத்திற் பலவிடங்களில் காணப்படும் `என்பழு, `என்மனார் புலவர்ழு, `இயல்புணர்ந்தோர் மொழிபழு போன்ற சொற்றொடர்களால் தொல்காப்பியர் காலத்தும் முன்பும் பல இலக்கண இலக்கியங்கள் இருந்தன வென்பது தெளிவு.

     யாப்பருங்கலவிருத்தி யாப்பருங்கலக்காரிகை (பழைய) உரை முதலியவற்றில் இக்காலத்துக் கிடையாத பல இலக்கண இலக்கியங்கள் மேற்கோளாக வந்திருக்கின்றன.
     இக்காலம் வழங்கும் இலக்கணங்கள், தொல்காப்பியம், வீரசோழியம், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம்,

     1. முந்துநூல் அகத்தியமும் மாபுராணமும் இசை நுணுக்கமும். அவற்றுட் கூறிய இலக்கணங்களாவன, எழுத்துச் சொற்பொருள் யாப்பும் சந்தமும் வழக்கியலும் அரசியலும் பார்ப்பனவியலும் சோதிடமும் காந்தருவமுங் கூத்தும் பிறவுமாம்.

-நச்சினார்க்கினியர்