பக்கம் எண் :

148தமிழகம்

     "முற்கூறியாங்குச் சிறந்த பெண் மனைவி, கிழத்தி எனப்படுவாள். இவள் இந்நிலத் தலைவன் மனைவி. மற்றைப் பெண்கள் இடைச்சியர் எனப்படுவார்கள்.
     "மருதநில மக்களுள் அங்ஙனம் உயர்ந்த ஆடவன் ஊரன், மகிழ்நன் எனப்படுவன், இவன் இந்நிலமக்களின் தலைவன். மற்றை ஆடவர் உழவர், கடையர் எனப்படுவர்.
     "முற்கூறியாங்குச் சிறந்த பெண் கிழத்தி, மனைவி எனப்படுவாள், இவள் இந்நிலத் தலைவன் இற்கிழத்தி. மற்றைப் பெண்கள் உழத்தியர், கடைசியர் எனப்படுவார்கள்.
     "நெய்தல் நில மக்களுள் முற்கூறியாங்குச் சிறந்த ஆடவன் சேர்ப்பன், புலம்பன் எனப்படுவன்; இவன் இந்நில மக்களின் தலைவன். மற்றை ஆடவர் பரதர், அளவர், நுளையர் எனப்படுவர்.
     "முற்கூறியாங்குச் சிறந்த பெண் பரத்தி, நுளைச்சி எனப்படுவாள், இவள் இந்நிலத்தலைவன் மனைவி. மற்றைப் பெண்கள் பரத்தியர், அளத்தியர், நுளைச்சியர் எனப்படுவார்கள்.
     "பாலை நில மக்களுள் முற்கூறியாங்குச் சிறந்த ஆடவன் விடலை, காளை, மீளி எனப்படுவன், இவன் இந்நிலமக்களின் தலைவன். மற்றை ஆடவர் எயினர், மறவர் எனப்படுவர்.
     "முற்கூறியாங்குச் சிறந்த பெண் எயிற்றி எனப்படுவாள், இவள் இந்நிலத்தலைவன் மனையாள். மற்றைப் பெண்கள் எயிற்றியர், மறத்தியர் எனப்படுவார்கள்.
     "தமிழர்கள் பண்டைக் காலத்தில் இங்ஙனம் நிலம் பற்றிய பகுப்பையே உடையவர்களாயிருந்தார்கள். இவர்களுள் ஒரு நிலத்து ஆடவன் தன்னிலத்துப் பெண்ணை மணந்து கொள்ளினுங் கொள்வான், வேறு நிலத்துப் பெண்ணை மணந்து கொள்ளினும் கொள்ளுவான். நிலம் பற்றிய இப்பகுப்பு உயர்வு தாழ்வைக் குறித்து வந்த