பக்கம் எண் :

162தமிழகம்

     எப்பொழுதும் ஆரியக் கொள்கைகள் தாம் மேலாகவிருந்தன வென்று கருதவேண்டாம். ஆரியரல்லாதவர்களுக்கு ஆரியர் பணிந்த இடங்களுமுண்டு. வேதகாலக் கடவுளரில் தலைவரான இந்திரனுக்கும் கிருஷ்ணனுக்கும் நடந்த போராட்டமொன்று, சிவமதத்தின் எழுச்சி இன்னொன்று. [வேதக்கடவுளாகிய பிரமனின் சிரத்தைச் சிவன் கிள்ளினான். பரமனை மதித்திடாப் பங்கயாசனன் ஒரு தலைகிள்ளி!"]                           சர். இராதாகிருஷ்ணன்.

4. நான்மறை

     தமிழர் சமயத்துக்குப் பிரமாண நூல்கள் நான்மறை. "நான்மறை முற்றிய வதங்கோட்டாசான்" என்னும் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தால் பண்டை மறைகள் நான்கு இருந்தன வென்பது புலனாகும். இன்னும் சங்க நூல்கள் நான்மறையைக் குறித்துப் பல்லிடங்களிற் கூறின. "அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே" (தொல்-எ.102.) என்பதால் அம்மறை இசையுடன் பயிலப் படுவது என்பது விளங்குகின்றது. அந்தணர் மறை என்றதனால் அம்மறைகள் அறவொழுக்கத்தின்பால் நின்றோராகிய அந்தணரால் பயிலப்பட்டன வென்பதும் அறியக் இடக்கின்றது. துறவிகளாகிய மறையவர்கள் வாக்கினின்றும் போந்த நிறைமொழிகளே மந்திர மெனப்படும்.

"வினையி னீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூலாகும்"
          என முதனூலுக் கிலக்கணம் தொல்காப்பியத்திற் கூறப்பட்டுள்ளது.
       "ஆறறி அந்தணர்க் கருமறை பலபகர்ந்து:"       (கலிகடவுள்)

     struggle with Indra, the prince of the Vedic gods is one instsnce. The rise of the cult of Siva is another." (Sir. Radhakrishnan)