பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்167

ஆசுமிகு துயர்விளைத்தும் இதம் அதுவாப்
பொருள்பெறலின் அரிய வேத
ஓசைமிகு மமருலகை அவர்வதைத்த
சீவனும்பெற் றுய்த லாலே"

(கொலைமறுத்தல்)

"குழைமுகந் தூங்குஞ் செம்மணிப் பசும்பொற்
குண்டல வேதியர் நாளும்
அழன்முகத் தாற்றும் அருமகத் தன்றிச்
செந்தசை அருந்தின ரில்லை

(காசி காண்டம்)

"அருமகத் தன்றியூன் சுவைத்துடல் வீக்குவோன்"    (மேற்படி)

"மருந்தில் திதியின் உயிருய்யும் வாயின் மகமதனில்
அருந்தற் கியல்பதத் தெனினும்"

(அருட்பிரகாசம்)

     மேற்காட்டியன முன் யாம் கூறியவற்றிற்கு எடுத்துக் காட்டுகளாகும்.
     அப்பைய தீட்சிதர் தாம் வேள்வி ஆசிரியனா யிருந்து இயற்றிய மகத்தில் வெட்டிக் குவிக்கப்பட்டிருந்த மிருகங்களைப் பார்த்து, "ஓ வேதமே! உன்னை நம்பினேன்" எனக் கதறி ஓலமிட்டனராம்.1

5. உபநிடதம்

     உபநிடதங்கள் என்னும் நூல்கள் கி.மு. 1000க்கும் கி.மு. 300க்கு மிடையில் எழுந்தன. அக்காலத்தில் ஆரியப் பிராமணர்கள் உண்மை ஞானந் தேடிப் பலவிடங்களுக்கும் அலைந்து திரிந்தார்கள். இவ்வாறு திரிந்தவர்களுள்

     1. The great Appaya Dikshithar horrified at the sight of the slaughtered animals at a vedic sacrifice he performed is said to have cried out, "Oh Ye Vedas! I believe you."
                                       (Tamiliyan Antiquary No.2)
     "But there is evidence of its (bulls) having been killed in sacrifices and its cooked flesh offered to the Gods, specially to Indra who seemed to have developed a keen taste and inordinate desire for it."                                (Rig Vedic, India.)