கற்கள் சங்கு முதலியன தெற்கிலிருந்து கிடைப்பனவாகக் குறிப்பிட்டுள்ளன. | -ஆக்ஸ்போர்ட் இந்திய வரலாறு பக்கம் 68, 69 | 7. கைத்தொழில் | தமிழ் நாட்டின் வளனும் தொழிலின் முறைகளும் இந்நாட்டார் பண்டை நாளில் பிற நாட்டாரோடு செய்து வந்த வாணிகப் பெருக்கை நோக்குழி நன்கு புலனாகும். பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்-கட்டும் நுண்வினை கண்டவர்கள் நம் மக்கள். அக்காலத்தில் வழங்கி வந்த பட்டாடைகளின் பெயர் சிலப்பதிகாரத்திற் சொல்லப்படுகின்றன. அவற்றின் பெயர்கள் கேட்பதற்கு இன்பம் பயப்பனவாம். அவை வருமாறு:- | "கோசிகம், பீதகம், பஞ்சு, பச்சிலை, அரத்தம், நுண்டுகில், சுண்ணம், வடகம், இரட்டு, பாடகம், கோங்கலா, கோபம், சித்திரக்கம்மி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க்காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குஞ்சரி, தேவகிரி, கத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி." | "நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து அரவுரி யன்ன யறுவை நல்கி" | (பொருநராற்றுப்படை) | | (உரை.) கண்ணிற்பார்வை, இஃது இழைபோன வழியென்று குறித்துப் பார்க்க வராத நுண்மை உடையவாய் பூத்தொழில் முற்றுப் பெற்றமையால் பாம்பின் தோலை யொத்த துகிலைக் கொடுத்து, | "காம்பு சொலித்தன்ன அறுவை" | (உரை.) மூங்கிலாடையை உரித்தாலொத்த மாசில்லாத உடை. | "ஆவி யன்ன அவிர்நூற் கலிங்கம்" (பெரும்பாண்) | | |
|
|