"புகைவிரித் தன்ன பொங்குதுகி லுடீஇ" (புறம் |
தமிழகத்தில் ஆடை நெய்யப்பட்டுப் பிறநாடுகளுக்கனுப்பப்பட்டது. முற்காலத்து வீடுகளி லிருந்துகொண்டே அருமையான ஆடைவகைக நெய்தற்குரிய நுண்ணிய நூலிழைகள் முழுவதும் வீட்டுப் பெண்களால் நூற்கப்பட்டன. இதற்குச் சான்று, "பருத்திப் பெண்டின் பனுவலன்ன" (உரை. பருத்தி நூற்கும் பெண்டாட்டியது சுகிர்ந்த பஞ்சுபோல) என்னும் புறப்பட்டாகும். |
"பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச் செஞ்சொற் புலவோனே சேயிழையா-எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நுண்முடியு மாறு." | (நன்னூல்) | |
மரம், இரும்பு, வெண்கலம், வெள்ளி, பொன் முதலியவற்றில் நுட்பம் வாய்ந்த தொழில் புரியும் கம்மியரும் பிற தொழிலாளரும் அக்காலத்து இருந்தார்கள் என்பது சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களா லறியப்படும். |
8. ஓவியம் |
தமிழ்மக்கள் ஓவியப் பெற்றியை விரித்துக் கூற வேண்டியதில்லை. பழைய சோழர் கட்டிடங்களும், பழைய கோயில்களும், அமராவதி, மாவலிபுரம் முதலிய விடங்களிலுள்ள சிற்ப நுட்பங்களும், பழந்தமிழ் மக்கள் அணிகலன்களும் அவர்கள் பாட்டுக்களும் தமிழோவியத்தின் உயர்விற்கு நிலைக்களங்களா யிருக்கின்றன. தாகூர் முதலிய கவிவாணரும் தமிழர்; ஓவியத்தைப் போற்றியிருத்தல் கவனிக்கத்தக்கது, `நெடுநிலை மாடத் திடைநிலத் திருந்துழிழு என்றும். `வேயா மாடமும்ழு என்றும், `மான்கட் காதலர் மாளிகை யிடங்களும்ழு என்றும் இளங்கோவடிகள் தமிழ்நாட்டுக் கட்டிடங்களைச் சிறப்பித்திருத்தல் காண்க. |
"சுடும ணோங்கிய நெடுநிலை மனைதொறு மையறு படிவத்து வானவர் முனிவர் | |