பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்197

2. சிறுவரின் பொழுதுபோக்கு

     சிறார், தச்சராற் செய்யப்பட்டுச் சிறிய குதிரைகளா லிழுக்கப்படும் தேர்களிற் செல்லும் இன்பத்தை எய்தாராயினும் தம் கைகளினால் விளையாட்டுத்தேரை இழுத்து இன்புறுவர்.
"தச்சன் செய்த சிறுமா வைய
மூர்ந்தின் புறாஅ ராயினுங் கையி
னீர்த்தின் புறூஉ மிளையோர்"

(குறுந்-61)

     சிறிய பெண்கள் கடலிலே நீராடும்போது மணலிலே சிறு வீடுகள் இழைத்து விளையாடுவர். (ஷ--326) வயிர உலக்கையினால் அவலிடிக்கும் பெண்கள் உலக்கையை எறிந்துவிட்டு வண்டலில் விளையாடுவார்கள். (ஷ--238.)
     ஊஞ்சல் (உஞ்சால்) ஆடுவதும் சிறுவர்களின் பொழுதுபோக்காகும்)
"பெருங்கயிறு நாலு மிரும்பனம் பிணையற்
பூங்க ணாய மூக்க."
     பள்ளிக்குப் போகாத சிறார், வேப்ப நீழலில் கோடுகள் கீறி நெல்லிக்காய்கொண்டு கழங்காடுவார்கள்.
"வேம்பின் புள்ளி நீழற்
கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்."

(நற்-3)

பெண்கள் வீட்டின் முற்றத்திலுள்ள
மணலில் கழங்காடுவார்கள்,

 (நற்-79)

     சிறார் குளங்களில் குதித்து ஆழ்ந்து கல் மண் முதலியவற்றை எடுத்து விளையாடுவார்கள். தாயம் ஆடுதல் பெரும் பாலார் பொழுதுபோக்காகும். "ஈரைந்து பெற்றான் உள்ளம் போல்" (கலி).

24, பெண்கள் கல்வி

     தமிழ் இலக்கியங்களில் பல பாடல்களைச் செய்தவர்கள் பெண்புலவர்களாகக் காணப்படுகின்றனர். ஆடவரைப்