பக்கம் எண் :

198தமிழகம்

போலப் பெண்களும் கல்வியிற் சிறந்து விளங்கினார்கள். போர்க்கோலங் கொண்டு செல்லும் படைகளிலும், `விறலியர்ழு என்னும் பெண்கள் இருந்தாரெனில் பெண்கள் கல்வி நிலை மிக ஏற்றம்பெற் றிருந்ததென்றே சொல்லவேண்டியிருக்கின்றது.
     காவற் பெண்டு, பேய்மகள் இளவெயினி, மாசாத்தியார், பூங்கணுத்திரையார், பொன்முடியார், ஒளவையார் முதலியோர் புறநானூற்றில் சில பாக்களைச் செய்தவர்களாவர்.

25. தமிழரின் பழக்கவழக்கங்கள்

1. தாலி தரித்தல்

     பழைய நாளிற் குறிஞ்சி நிலத்து இளைஞர் புலியை எய்துகொன்று தமது வீரச்செயலைக் காண்பித்து மலைவாணர் மகளிரை வதுவை செய்வர். புலியைக் கொன்ற ஆடவன் தனது வீரத்துக்கு அடையாளமாகப் புலியின் பற்களை நாணிற் கோத்துப் பெண்ணின் கழுத்தில் அணிவான். இவ்வழக்கமே நாளடைவில் தாலி தரிக்கும் வழக்கமாக வந்தது. இது தமிழ் நாட்டுக்கே உரியது.

2. மனைகள்

     வறியவர் வீடுகள் மண்ணினால் எடுக்கப்பட்ட சுவர்களுடையன, புல்லினால் அல்லது தென்னங் கீற்றுகளினால் வேயப்பட்டன. வீட்டின் முன்புறத்தில் பந்தர் இருக்கும். அதனைத் தலைவாயில் என்று வழங்குவர். சுவர்கள் சிவந்த மண்ணினால் மெழுகப்பட்டிருந்தன. பட்டினங்களில் வீடுகள் செங்கல்லினாற் கட்டப்பட்டு ஓட்டினால் வேயப்பட்டன. அவற்றில் மானின் கண்போன்ற சாளரங்கள் வெளிச்சம் புகுவதள்காக அமைக்கப்பட்டன. சில கோட்டை கொத்தளங்கள் செங்கல்லினாலும் சுண்ணாம்பினாலும் எடுக்கப்பட்டன.