பக்கம் எண் :

236தமிழகம்

     "அவ்விடத்து ஏறுகளைத் தழுவிப்போக்கும்படியை உட்கொண்டு வந்து திரண்டு மழை முழக்கென்ன இடியென்ன நடுவானிலத்தின் முன்னே ஆரவாரமெழப் புகையோடு புகையெழ ஏறு தழுவினார்க்குக் கொடுத்தற்கு நல்ல மகளிர் திரண்டு நிற்ப, நீர்த் துறையிலும் ஆலமரத்தின் கீழும் வலியினையுடைய மராமரத்தின் கீழும் உறையுந் தெய்வங்கட்குச் செய்யும் முறைமைகளைப் பரவித்தொழுவிலே பாய்ந்தார்.
     "எருதினது நோக்கை அஞ்சானாய் அதின்மேல் பாய்ந்த இடையினைச் சாவக் குத்திக் கொம்பிடத்தே எடுத்துக்கொண்டு உடலைக் குலைக்கின்ற தோற்றரவைக்காணாய், அழகிய தலைமயிரினையுடைய மனமசைந்த இயல்பினை யுடையளாகிய துரோபதையது துய்ய கூந்தலிலே கையை நீட்டிய துச்சாதனனுடைய நெஞ்சைப்பிளந்து போகட்டுப் பகைவர் நடுவே தான் சொன்ன வஞ்சினத்தை வாய்க்கச் செய்த வீமசேனனைப்போலும்."

 (கலி. 101)

     "ஏறாகிய எருமையை யேறுகின்ற கூற்றுவனுடைய நெஞ்சை வடிம்பாலே பிளந்து போகட்டுச் சினத்தோடே அரிய உயிரை வாங்கின அஞ்ஞான்றை யிறைவன் இத்தன்மையை உடையவன்கொலென்று கூறும்படியாகக் காற்றின் விசை போல ஓடி வந்து விரைந்து ஏறாகிய காரியதனைப் பலரும் வந்து சேர்தலையுடைய களத்தே வலியடங்கத் தழுவி வருத்தி அதன் மேலே தோன்றி நின்ற பொதுவனது அழகைப் பாராய், அதனைக் கண்டு என் நெஞ்சு உட்கிற்றுக்கா ணென்றாள்."

 (கலி. 103)

21. பழைய மணமுறை

     சோறு நெய்யுடன் முதியோருக்கு அளிக்கப்பட்டது. பட்சிகள் நன்னிமித்தங் காட்டின. பெரிய வானம் களங்கமின்றி யிருந்தது. சந்திரன் குற்றமில்லாது ரோகிணியுடன் பொருந்தியிருந்தான். மணப்பந்தல் அலங்கரிக்கப்பட்டது. தெய்வத்தை வழிபட்டார்கள். பெரிய முழவு