ஆவின் கழுத்தில் மணி யணிதல், மகளிர் வண்ட லயர்தல், குறச்சிறார் குறி சொல்லுதல், சிறு பிள்ளைகள் சிறுதேருருட்டி விளையாடுதல், புலிப்பற்றாலி சிறார்க் கணிதல், பெண்கள் துணங்கைக்கூத் தாடுதல், வண்ணாத்தி கஞ்சிப் பசை போடுதல், விளையாட்டு மகளிர் மணல் வீடுகட்டுதல், நுளைச்சியர் நெல் பெற்று உப்புத் தருதல், பரதவர் கட்டு மரத்திலிருந்து மீன் பிடித்தல், அலவன் தனது பெடையை நீராட்டுதல், அன்றில் பனைமடலிற் கூடுகட்டுதல், குயில் மூங்கிலிற் றங்குதல், சூல்மகளிர் புளிப்பை விரும்புதல், வாளைமீனுக்குக் கொம்பிருத்தல், கிளி வேப்பம்பழத்தைக் கவ்வுதல், யானை தனக்குச் செய்த தீங்கை மறவாமை, யானை வாழைத்தண்டால் மதமழிதல், துயரால் வருங்கண்ணீர் வெப்பமாதல். |