6. தமிழர் தொன்மை அகவல் |
"ஒண்மை யறிவு மோர்வுமிக் கோரே உண்மை கேண்மின்! உண்மை கேண்மின்! மீன்கொடி படைத்த மேன்மை மனுக்கள் ஆன்ற பாண்டிய ரனைவருந் தமிழர் தென்கட் பஃறுளி யாறு சீர்சால் | |
5 |
நற்புகழ் வடக்கண் நளிரிமை யார்மலை உரைதமிழ் நாடா வயங்கிய முற்கால் திருவிட மெனும்பே ரதற்குச் சிறந்தது பின்னா ரியர்கள் பிறங்கிந் நாட்டில் உன்னி வந்துகுடி யுறுமுன மிங்குத் | |
10 |
தமிழ்மொழி வழக்குந் தகையொண் ணூலும் இமிழிசை யைந்திணை இனமுந் தேவும் போற்றுவர் யார்க்கும் பொதுச்சிவக் கோளும் ஆற்றருந் தளியு மகத்தெண் ணெழுத்தும் நயமிகு மொழுக்கமும் நனிச்சீர் தேற்றமும் | |
15 |
உயிர்த்திருந் தனவற முயற்றர சிருந்தது மற்றிவை யாவும் வான்றமிழ்ப் புலவர் சொற்ற மொழிகள் தொகைப்படு வேதம் ஆகமம் புராணம் மவரிதி காசம் வாகய லார்சொல் மருளி லாங்கிலங் | |
20 |
கற்றவர் கற்பொறி கவின்பந் தாக்கர் தத்தர் முன்னையர் தம்முரை வழியால் துணியப் பட்டன--தோன்றீ ரினத்தில் இணங்கா நாற்குல மியற்றினர் பின்னோர் என்று மொருதலை விவையுள் | |
25 |
மன்னி யுணர்ந்து மயக்கொழி வீரே." | |
-விருதை. சிவஞான யோகிகள். |