பக்கம் எண் :

4தமிழகம்

லப்பட்ட பெயர்கள் இக்காலம் கருங்கடல் (Black Sea) செங்கடல் (Red Sea)வெண்கடல் (White Sea) என வழங்கும் பெயர்களை மானுதல்
கூடும். மேலே காட்டியவை இவ்வுலகம் காலத்துக்குக் காலம் பல்வேறு மாறுதல்களடைந்து வருகின்றதென்பதை வலியுறுத்துவன.
இந்தியா நாடு இன்று காணப்படும் வடிவினை முன் அடைந்திருக்கவில்லை. கன்னியாகுமரிக்குத் தெற்கே காணப்படும் இந்துமாகடல்
முன் ஒரு பெரிய நிலப்பரப்பாக விளங்கியது. அது கிழக்கே பர்மா தொடங்கித் தெற்குச் சீனா வரையிலும், மேற்கே ஆப்பிரிக்காவின் கிழக்குத்
தெற்குக் கரைகள் வரையிலும், வடக்கே விந்தியவரை வரையிலும் விரிந்திருந்தது. அந்நிலப்பரப்புக்கு ஆங்கில பௌதிக நூலார் லெமூரியா என்னும் பெயர் இட்டனர். தமிழ் முன்னோர் இதனைக் குமரிக்கண்டம் என வழங்கினர்.
மிக முற்காலத்தில் இந்தியக்குடாநாடு ஒரு பெரிய பூகண்டத்தின் பகுதியாகவிருந்தது. அப்பூகண்டம் கிழக்கே பர்மா தென்சீனம்
வரையும், மேற்கே தென்னாப்பிரிக்கா வரையும், வடக்கே விந்தியமலை வரையும், தெற்கே ஆத்திரேலியா வரையும் அகன்று கிடந்தது. இவ்வாறு
கொள்வதற்கு நிலநூல் சான்று உள்ளது.
ஒருகாலத்துக் கடல் பொங்கி யெழுந்து அதன் பல பகுதிகளைத் தன்னகப்படுத்திக்கொண்டது. முன் ஒன்றாயிருந்த ஆத்திரேலியா, சீனா, ஆப்பிரிக்கா, இந்தியா முதலிய நாடுகள் அக்காலத்திலேயே பிளவுபட்டிருத்தல் வேண்டும். ஸ்காட் எலியட் கூறும் ஐந்தாவது கடல்கோட் காலமே அவ்வெள்ளப் பெருக்கின் காலமெனக் கருதப்படுகின்றது.1

     1. "There is Geological evidence to prove that in very early time South India formed part of a huge continent which extended
from Burma and South China in the east, South Africa on the west, Vindhya hills on the North and Australia on the South" -Rig
Vedic India-P. 91.