எழுத்துக்கள் கொண்ட நாணயங்கள் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கிடைத்துள்ளன. | மொழியைப் போலவே சமய வாழ்வு, நாகரிகம், கலை, பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிலும் சிந்துவெளி பெரிதும் தென்னாட்டையும் தமிழகத்தையும் நினைவூட்டுவதாயுள்ளது. இறந்தவரைப் புதைத்தல், சமயச் சார்பற்ற நாகரிகம், தொழில் வாணிகச் சிறப்பு, நகரவாழ்வு, உயர் இன்பவாழ்க்கைப் பொருள்கள், திட்டமிட்ட நகரமைப்பு ஆகியவகைகளில் சங்க இலக்கிய காலத் தமிழகத்துக்குச் சிந்துவெளி மிக அணுக்கத் தொடர்புடையது. இவை எல்லாவற்றிலும் சிந்துவெளி நாகரிகத்துக்குப் பிற்பட்ட காலத்துக்குரிய வேத நாகரிகம் வேறுபட்டது ஆகும். | இன்றைய தென்னாட்டு நாகரிகத்தின் தனிச்சிறப்புக்குரிய கூறுகளுள் ஒன்று தெப்பக்குள அமைப்பு ஆகும். மொகஞ்சதரோவின் அரண்மனை யடுத்த செய்குளம் பேரளவில் தென்னாட்டுத் தெப்பக்குளங்களை நினைவூட்டுவதாயுள்ளது. அதன் அமைப்பு இன்றைய அமைப்பாண்மை வல்லுநருக்குக்கூட வியப்பூட்டுகின்றது. நீர்த்தேக்க எல்லையிலேயே அது 1200 செ.மீ அடி நீளம் 690 செ.மீ. அகலம் உடையது. சுற்றிலும் நீர் எல்லைவரைப் படிக்கட்டுகளும் 135 செ.மீ., 210 செ.மீ. திண்ணம் உள்ள இருமதில்களும் உள்ளன. மதில்களினிடையிலும் மதில் முகட்டிலும் அகலமான சுற்றுப்பாதைகள் உள்ளன. செய்குளத்தின் அடித்தளம் வழவழப்பாக இழைக்கப்பட்ட செங்கல்லால் பாவப்பட்டு நிலக்கீலால் தற்கால சிமிட்டிப் பூச்சுப்போலத் தோன்றும்படி பூசப்பட்டுள்ளது. அடித்தளத்தில் நீர் ஊறித் தண்ணீர் கெட்டுவிடாமலிருப்பதாகச் செய்யப்பட்ட இவ்வேறுபாடு இன்றளவும் நீரைத் தூய்மையுடையதாகக் காக்கிறது. நிலக்கீல் மொகஞ்சதரோவில் அருகலாகவும் சுமேரில் ஏராளமாகவும் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அது அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். | | |
|
|