பக்கம் எண் :

40
 
வில்லை. கி.மு. 2500-வது ஆண்டுக்குப் பின் அவை திடுமென அழிவுற்றதற்கான
அடையாளங்கள் உள்ளன. இருக்கு வேத ஆரியர் படையெடுப்பாலேயே அவை
அழிந்திருக்க வேண்டும் என்று அறிஞர் கருதுகின்றனர்.
 
     இருக்குவேத ஆரியர் தங்கள் எதிரிகளை ஆரியர் அல்லாத வர்கள், தாசர்கள்
(கறுப்பர்கள்), புரியா மொழி பேசுபவர்கள், சப்பை மூக்கர், தமக்கென்று
வேறுமாதிரியான வழிபாடுகளையுடையவர்கள், சிசுன தேவர்கள் (இலிங்கத்தை
வணங்குபவர்கள்), மாயமந்திரம் வல்லவர்கள், கோட்டையால் பாதுகாக்கப்பட்ட பல
நகரங்களையுடைவர்கள், மிகுந்த செல்வமுடையவர்கள் என்றெல்லாம்
குறிப்பிட்டுள்ளனர். இவ்வர்ணனைகள் அனைத்தும் சிந்துவெளி நாகரிகத்துடன்
முற்றிலும் பொருந்துபவையே. இந்திரன் உதவியால் இம்மக்கள் நகரங்களைத் தாங்கள்
அழித்ததாக அவர்கள் பல தடவை கூறுகின்றனர்.
 
     இருக்குவேதத்தில் கண்டிக்கப்பட்ட சிந்துவெளி மக்களின் பழக்க வழக்கங்கள்,
கோட்பாடுகள் ஆகியவை யசுர் முதலிய பிற்பட்ட வேதங்களிலும் பிற்கால
புராணப்பகைமையும் தணிந்தபின் சிந்துவெளிச்சமயம், நாகரிகம், பழக்க வழக்கங்கள்
ஆகியவைகள் புதிய இந்தோ - ஆரியரால் மேற்கொள்ளப்பட்டன என்று அறிகிறோம்.
ஆனால் பண்பாடுகள் ஏற்கப்பட்டாலும் சிந்து வெளித் திராவிட மக்கள் மொழி, ஆட்சி,
நாகரிகத் தூய்மை ஆகியவை சிந்து கங்கை வெளியில் படிப்படியாகக் கைவிடப்பட்டன.
நாளடைவில் தென்னாட்டின் வடகோடியையும் இவை தாக்கின.
 
     சிந்துவெளி நாகரிகம் பற்றிய செய்திகள் இன்னும் முழுதும் பழம்
பொருளாராய்ச்சியால் தெளிவு பெறவில்லை. அகழ்வு ஆராய்ச்சியில் ஒரு பகுதியே
நடைபெற்றுள்ளது. வருங்காலத்தில் அகழ்வும் ஆராய்ச்சியும் பெருகித் திராவிட
நாகரிகம், தென்னாட்டு வரலாறு ஆகியவற்றுக்கு இன்னும் மிகுதியான விளக்கம் ஏற்பட
வழியுண்டு.