பக்கம் எண் :

70
 
நாகபாணன் என்பவனைக் கொன்று அவன் கையில் சிக்கிய நாட்டுப் பகுதியை
மீட்டான். ஆனால் சாஷ்டணன் என்ற அடுத்த சத்திரபன் மீண்டும் வெற்றியடைந்தான்.
கி.பி.184 முதல் 213 வரை ஆண்ட யக்ஞசிரீ மீண்டும் சில வெற்றிகள் கண்டான்.
 
     ஆந்திரப் பேரரசர் திரையர் அல்லது பல்லவர் மரபைச் சேர்ந்தவரே.
பெயருக்கேற்ப அவர்கள் கடல் வாணிகத்தில் சிறந்திருந்தனர். அவர்கள் நாணயங்களில்
இரு பாய்மரமுடைய ஆழ்கடலோடும் கப்பல் பொறிக்கப் பட்டிருந்தது. அக்காலத்தில்
ஆந்திர கருநாடக தமிழகக் குடிகள் கடல் கடந்து வாணிகக் குடியேற்றங்கள்
அமைத்திருந்தனர்.
 
கனகவிசயர்
 
     சேரன் செங்குட்டுவன் வடநாட்டில் படையெடுத்தது கௌதமிபுத்திரனுக்கும்
யக்ஞசிரீக்கும் இடைப்பட்டகாலம் ஆகும். அவனுக்கு உதவிய நூற்றவர் கன்னர்
என்பவர் ஆந்திர சதகர்ணிகளே எனக் கூறப்படுகிறது. ஆந்திரரின் எதிரிகளாகிய சக
அரசர்களும் குஷாண அரசனான கனிஷ்கனும் அவன் கீழ்ச் சிற்றரசனான விசயாலயனும்
சேர்ந்திருந்தனர். தோற்ற கனக விசயர் இந்த கனிஷ்கனும் விசயலாயனுமேயாவர் என்று
பல வரலாற்றாசிரியர் கருதுகின்றனர். அதற்கேற்ப, கனிஷ்கனின் பின்னோர் புத்தசமயம்
விடுத்துச் சைவசமயம் சார்ந்திருந்தனர். செங்குட்டுவனும் மற்றத் தமிழரசரும் புத்தரால்
அலைப்புண்ட வட ஆரியருக்குத் தமிழகத்தில் சதூர்வேதி மங்கலங்கள் அளித்தும்,
அவர்கள் ஆதரவுக்காக வேள்விகள் நடத்தியும் வந்தனர். வேள்விக்குடிப் பட்டயமும்
இலக்கியக் குறிப்புக்களும் இதற்குச் சான்று பகர்கின்றன.
 
     யக்ஞசிரீயன் ஆட்சிக்காலத்திலேயே (கி.பி.184-213) ஆந்திரப் பேரரசு
தளர்ச்சியுற்றுச் சிதறத் தொடங்கிற்று. பூனா, நாசிக் ஆகிய பகுதிகளை ஆண்ட சூடு
சதகர்ணி மரபினர் பேரரசின் தளையவிழ்த்துத் தனியாட்சியாளராயினர். கி.பி. 230-க்குள்
ஆந்திரப் பேரரசின் பெயர் வரலாற்றில் மறைந்தது.