பக்கம் எண் :

மணவாள முனிவர்

மணவாள முனிவர் (15 நூ)

வே. பெ:யதீந்திரப் பிரணவர்.
ஊர்:பாண்டிய நாட்டில் சிக்கல் கிடாரம்.

இவரே பெரிய ஜீயர் எனப்படுபவர். வைணவ சமயத்தில் தென்கலையாருக்குத் தலைவர். இவர் முதலில் அரசு சேவையில் அமர்ந்து துறவற நெறி நின்றவர்.

நூல் :

உபதேசரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதிபிரமேயசாரம், ஆர்த்திப்பிரபந்தம், கீதா தாத்பரிய தீபம், விரோதி பரிகாரம்,திருமந்திரார்த்த வியாக்கியானம்.

மணவைக் கூத்தன் (15 நூ)

இவருடைய பெயர் ‘மணவையூருடையான் பூமாலைக் கூத்தன் பாண்டிப் பெருமாள்’ எனவும் காணப்பெறுகின்றது. சிறந்த புலவராக விளங்கிய இவர் தனிப்பாடல் இயற்றியதேயன்றி நூல்கள் ஏதும் செய்ததாகத் தெரியவில்லை.

நூல் :தனிப்பாடல்.

மணி திருவேங்கட முதலியார் (20-நூ)

நூல் :

நெல்லையப்ப முதலியார் என்பவர் பாடிய ‘சிவசாமிதேசிகர் தெரிசனமாலை, தோத்திர மாலை’ என்னும் நூலினைப் பாராட்டி வழங்கியசிறப்புப் பாயிரம்.

மணிவாசக சரணாலய அடிகள் (20 நூ)

ஊர் :சேதுநாட்டில் வேப்பங்குளம்.
தாய் : இலக்குமி அம்மாள்;தந்தை : சோணைமுத்து அம்பலகாரர்;கள்ளர்மரபு.

இவருடைய பாட்டனார் சின்னைய தேசிகர் என்பவர் சிறந்த யோகியாகவும் ஞானியாகவும் விளங்கினார். அவரருளால் தோன்றிய இவர் இளமையில் ஆண்டவன் என்று பெயரிடப்