மதுரகவிராயர் 1 (18 நூ) ஊர் : | தொண்டை நாட்டில் அமரம் பேடு. |
இவர் விரைவாகச் செய்யுள் இயற்றும் திறம் பெற்றவர்; செல்வர்கள் பால் சென்று பரிசு பெற்று வாழ்க்கை நடத்துவதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். பிரம்பூர் ஆனந்த ரங்கம் பிள்ளையையும், காளத்தி முதலியாரையும் பாராட்டித் தனிப்பாடல்கள் பல பாடியுள்ளார். நூல் : | திருக்கச்சூர் நொண்டி நாடகம். |
மதுரகவிராயர் 2 (19 நூ) இவர் இராமநாதபுரம் முத்திருளப்ப சேதுபதியின் அவைக்களப் புலவராக விளங்கியவர். நூல் : | பாம்பு கடித்துத் தாம் பிழைத்து வந்தது குறித்துப் பாடிய தனிப்பாடல். |
மதுரஞ்சுந்தர பாண்டியனார் ( ) இவர் தேவாரம் பாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்தார். நூல் : | திருவருள்மாலை, முருகமணிமாலை. |
மதுரமுத்துச் செட்டியார் (19 நூ) ஊர் : | வால சமுத்திரம். | நூல் : | பழநியப்பக் கவிராயர் என்பவர் இயற்றிய ‘தோத்திரமாலை’ என்னும் நூலுக்கு வழங்கிய சிறப்புப்பாயிரம். |
|