மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் (சங்ககாலம்) இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். கோடன் என்பது இவருடைய தந்தையையோ அல்லது இவருக்குரிய மற்றொரு பெயரையோ குறிக்கலாம்என்பர். ஆசிரியர் என்பதனால் கல்வி கற்பிக்கும் தொழிலை மேற்கொண்டவராவர். மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் (சங்ககாலம்) இவர் பெயர் மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் என்றும் காணப்படுகிறது. முடத்தாமக் கண்ணியார், புல்லாளங் கண்ணியார் என்பதுபோல இவர் இளங்கண்ணியார் என்று அழைக்கப் பெற்றார். கௌசிகன் என்பது முனிவர் பெயராகும். எனவே, பெற்றோர் இவருக்கு இட்டபெயராகக் கொள்ளலாம். மதுரை இளங்கௌசிகனார் (சங்ககாலம்) இவர் பற்றிய வரலாறு ஒன்றும் தெரியவில்லை.
|