பக்கம் எண் :

19

மதுரைக்கடையத்தார் மகன் வெண்ணாகனார்              (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயர் வெண்ணாகன் என்பது. தந்தையின் பெயர் மதுரைக் கடையத்தார்.

நூல் :குறுந்தொகை 223.

மதுரைக் கண்டரத்தனார்                               (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊரொடு தொடர்ந்த சங்கப் புலவர்களுள் ஒருவர்.

நூல் :குறுந்தொகை 317.

மதுரைக் கண்ணத்தனார்                               (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊராற் பெயர் பெற்ற சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் கண்ணத்தனார் என்றும் வழங்கப்படுவர்.

நூல் :அகம் 360, நற்றிணை 351.

மதுரைக் கணக்காயனார்                               (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊராற் பெயர் பெற்ற சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் நக்கீரனாருக்குத் தந்தையாராவர். பாண்டி வேந்தன்பால் பேரன்பு கொண்டவர். அவனைப் பசும்பூண் பாண்டியன் என்று அழைக்கிறார். கணக்காயன், கணக்காயன் தத்தன் என்று வழங்கப்படுகின்ற சங்கப் புலவரினின்று வேறானவர் என்பதும்