மகுமுதிப்றாஹிம்லப்பை (19 நூ) நூல்: | ஒலிநாயகரவதாரச் சிந்து. |
இந்நூல் முகியித்தீனாண்டகையவர்களின் இயற்கையும் செயற்கையுமாகிய நிகழ்ச்சிகளைக் கூறுவது. சிந்துப் பாடல்களோடு விருத்தம் முதலியனவும் கலந்து வந்துள்ளன; 104 செய்யுட்களை உடையது. மகேசகுமார சர்மா (20 நூ) நூல் : | ஆநந்த மடம் (தமிழாக்கம்), நிர்மலா. |
ஆநந்தமடம்:- பங்கிம் சந்திரர் வங்க மொழியில் இயற்றிய நூலின் தமிழாக்கம். மங்கைபாகக் கவிராயர் (19 நூ) வாழ்விடம் : | பாண்டிய நாட்டில் மிதிலைப்பட்டி. | நூல்: | ‘கொடுங்குன்ற புராணம்; ‘வருக்கக்கோவை’. |
வருக்கக் கோவை: நத்தம் பெருநிலக்கிழார் முடிலிங்கைய நாயகர் குமாரர் சொக்கலிங்க நாயகர் மீது பாடப்பெற்றது. இந்நூல் பாடியமைக்காகப் பூசாரிப்பட்டி என்னும் ஊரை நன்கொடையாகப் பெற்றார். இந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை. மங்கைவாழ் கவி (19 நூ) இவர் வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தவர். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும், கிழக்கிந்தியக் கம்பெனியார்க்கும் நிகழ்ந்த போர்களை நேரில் கண்டவர். அந்நிகழ்ச்சிகளைக் கும்மிப் பாடல்களாகப் பாடியுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு அஞ்சாமல் இக்கும்மிப் பாடல்களைப் பாடிச் சிறைத்தண்டனை பெற்றார். நூல்: | பாஞ்சாலங்குறிச்சிப் போர் நிகழ்ச்சிக் கும்மிப்பாடல்கள். |
|