பக்கம் எண் :

100

ஆமதா பாத்தினிலே-சபர்மதி
     ஆற்றங் கரைதனிலே,
சேமம் பெருகிடவே-அமைத்தார்
     சிறந்ததோர் ஆசிரமம்.

கல்வியைப் பெற்றிடலாம்-அங்கே
     கைத்தொழில் கற்றிடலாம்.
நல்ல குணங்களெல்லாம்-பெற்று
     நாட்டுக் குழைத்திடலாம்.

அண்ணனும் தம்பியும்போல்-பலர்
     அன்புடன் வாழ்ந்துவந்தார்.
நன்மைகள் செய்திடவே-அவர்கள்
     நாளும் பழகிவந்தார்.

நிலத்தை உழுதுவந்தார்-ராட்டை
     நித்தமும் சுற்றிவந்தார்.
பலப்பல கற்றவரும்-அங்கே
     பாமரர் போல்உழைத்தார்.

இந்தியப் பொருள்களையே-அவர்
     என்றும் பயன்படுத்தி