அகிம்சை முறையிலே தேசமெங்கும் ஹர்த்தால் நடத்திட வேண்டுமென்றே மிகவும் கவனமாய் காந்திமகான் வேண்டுகோள் ஒன்றை விடுத்தனரே. அண்ணல் குறித்த தேதியிலே ஹர்த்தால் நடந்தது தேசமெங்கும். சின்னஞ் சிறிய ஊர்களிலும் திறமையாய் ஹர்த்தால் நடந்ததுவாம். எந்தக் கடையும் திறக்கவில்லை. எவருமே வேலைக்குச் செல்லவில்லை. “இந்தியர் அனைவரும் ஒன்றுபட்டார்” என்ப துணர்ந்தனர் வெள்ளையர்கள். |  | | |
|
|