பக்கம் எண் :

110

ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும்
     அலற அலறவே சுட்டுவிட்டான்!
நானூறு பேர்களைக் கொன்றுவிட்டான்!
     நமனையும் அங்கே மிஞ்சிவிட்டான்!

இந்தக் கொடுமையைக் கேட்டதுமே
     இரத்தம் கொதித்தது மக்களுக்கே.
வெந்தது காந்தியின் உள்ளமுமே,
     வேதனைத் தீயுமே சுட்டதனால்!