பக்கம் எண் :

115


 

திட்டங்கள்
 

உலகமே இதுகண்டு போற்றுகையில்
     உண்மை உணராத வெள்ளையர்கள்
கலகங்கள் யாவுக்கும் காந்திஜியே
     காரணம் என்று பழித்தனரே.

அறவழி சென்றிடும் அண்ணலினை,
     அன்பே வடிவான காந்தியினை
சிறையினில் ஈராண்டு வைத்திருந்தே
     திரும்பவும் விடுதலை செய்தனரே.