சிறையி லிருந்து திரும்பியதும் தேச நலத்தினை எண்ணிஎண்ணி அருமை மிகுந்தநல் திட்டமெல்லாம் அன்புடன் காந்தி வகுத்தனரே. “இந்துவும் முஸ்லீமும் ஒன்றுபட்டால் இந்திய நாடு பலமடையும். இந்திய நாடு பலமடைந்தால், எவருக்கும் நாம்அஞ்சத் தேவையில்லை.” என்றுநம் காந்தி எடுத்துரைத்தும், இந்துவும் முஸ்லீமும் சண்டையிடக் கண்டு மிகவும் வருந்தினரே. கலகங்கள் யாவும் நிறுத்திடவே, உண்ணா விரதம் இருந்தனரே. ஓரிரு நாட்களா? இல்லை, இல்லை; எண்ணி இருபத் தொருநாட்கள் இருந்தபின் அமைதி நிலவியதே! ஃ ஃ ஃ மனைவியும் மக்களும் வீட்டினிலே வயிற்றுக் கில்லாமல் துடிக்கையிலே அனுதினம் கள்ளைக் குடித்துவந்தோர் அதிகம் இருந்தனர் நாட்டினிலே. |