“ராட்டையில் தினமுமே நூற்றிடுவோம். நல்ல கதர்உடை கட்டிடுவோம். நாட்டினில் பஞ்சம் போக்கிடுவோம். நம்மவர் துயரம் தீர்த்திடுவோம். சொந்தநம் நாட்டுச் சகோதரர்கள் சோற்றுக் கில்லாமல் தவிக்கையிலே, அந்நிய நாட்டுத் துணிகளையே அணிவது பாபம்” எனஉரைத்தார். கண்போல் கதரைக் கருதிவந்தார்; கைராட்டை யால்தினம் நூற்றுவந்தார். உண்ணா விரதம் இருக்கையிலும் ஒருநாளும் நூற்கா திருந்ததில்லை. |