பக்கம் எண் :

123

காந்தி யோடு தலைவர் பலரும்
     கைது செய்யப் பட்டதால்,
சேர்ந்து நின்று கிளர்ச்சி செய்தார்
     தேச மக்கள் யாவரும்.

நாட்டில் எங்கும் சட்ட மறுப்பு
     நாளும் நடந்து வந்ததால்,
ஆட்சி யாளர் பணிந்து விட்டார்.
     அறமே வெற்றி பெற்றது!

உரிமை தந்தார் உப்புக் காய்ச்ச
     உடனே வெள்ளைக் காரர்கள்.
சிறையி லிருந்து வெளியே விட்டார்.
     தேச பக்தர் தம்மையும்.