இரண்டாம் உலகப் போர் | அகிலம் முழுதும் ஆண்டிட ஆசை கொண்ட ஜெர்மனி மிகவும் கொடிய போரிலே வெறிபி டித்து இறங்கவே, பிரிட்டன், பிரான்சு நாடுகள் பெரிய படையைத் திரட்டின. முறிய டிப்போம் என்றன; மூர்க்க மாக எதிர்த்தன. இந்தச் சண்டை தன்னையே இரண்டாம் உலகப் போர்என அந்த நாளில் அழைத்தனர்; அதிகத் துன்பப் பட்டனர். “அடிமை யாக மக்களை ஆக்கு தற்கே ஜெர்மனி கொடிய போரைத் தொடுத்தது. குற்றம் அவர்கள் பக்கமே” | | |
|
|