பக்கம் எண் :

124

இரண்டாம் உலகப் போர்
 

அகிலம் முழுதும் ஆண்டிட
     ஆசை கொண்ட ஜெர்மனி
மிகவும் கொடிய போரிலே
     வெறிபி டித்து இறங்கவே,

பிரிட்டன், பிரான்சு நாடுகள்
     பெரிய படையைத் திரட்டின.
முறிய டிப்போம் என்றன;
     மூர்க்க மாக எதிர்த்தன.

இந்தச் சண்டை தன்னையே
     இரண்டாம் உலகப் போர்என
அந்த நாளில் அழைத்தனர்;
     அதிகத் துன்பப் பட்டனர்.

“அடிமை யாக மக்களை
     ஆக்கு தற்கே ஜெர்மனி
கொடிய போரைத் தொடுத்தது.
     குற்றம் அவர்கள் பக்கமே”