பக்கம் எண் :

128

“விடுதலை தாருங்கள். இல்லையெனில்-உடன்
     வெளியேறிச் செல்லுங்கள், நாட்டைவிட்டே.
படையோடு அந்நியர் வந்திடினும்-எங்கள்
     பாரத நாட்டினைக் காப்போம்” என்றார்.

தொல்லைகள் தீரவே வெள்ளையரின்-ஆட்சி
     தொலைந்திட காந்தி விரும்பினராம்.
‘வெள்ளைய னேவெளி யேறு’என்றே-அவர்
     வீர முழக்கமும் செய்தனராம்.

‘வெள்ளைய னேவெளி யேறு’என்றே-மக்கள்
     வீதிகள் எங்கும் முழங்கினராம்.
பள்ளியில் சென்று படித்துவரும்-சிறு
     பாலரும் கூடச் சேர்ந்தனராம்