கணவனே தெய்வம் என்றுதொழும்-அன்னை கஸ்தூரி பாயையும் கைதுசெய்தே துணையாய் வைத்தனர் காந்தியுடன்-ஆனால் துக்கம் நிகழ்ந்ததே அச்சிறையில்! சிறையினில் வாழ்ந்து வருகையிலே-பெருந் தியாகி கஸ்தூரி மறைந்தனராம். பொறுமை மிகவும் உடையவராம்-நல்ல பொன்போல் குணங்கள் நிறைந்தவராம். காந்தி மடியில் தலையைவைத்தே-அன்னை கஸ்தூரி பாயும் பிரிந்துவிட்டார். சாந்தி நிலவும் முகத்தினையே-கண்டு தாங்கொணா வேதனை காந்தியுற்றார். விளையாடும் தோழியாய் உதவவந்தார்-நாட்டின் விடுதலைப் போரிலும் உதவிநின்றார். எழுபத்தைந் தாவது வயதினிலும்-அவர் இணையில்லாத் துணையாய் இருந்துவந்தார். கண்களைக் காக்கும் இமைகளைப்போல்-மகான் காந்தியை என்றுமே காத்துவந்தார். அன்னை கஸ்தூரி மறைந்தசெய்தி-நாட்டை அளவில்லாத் துயரினில் ஆழ்த்தியதே. | | |
|
|