பக்கம் எண் :

132

“அந்நியர் இன்னமும் ஆளுவதோ-இந்த
     அநியாயம் தன்னைச் சகிப்பதுவோ?
இந்திய நாடுநம் இந்தியர்க்கே”-என்று
     இடிபோல் முழங்கினர் யாவருமே.

கொடியுடன் ஊர்வலம் வந்தனரே-எங்கும்
     கூட்டங்கள் கூட்டியும் பேசினரே.
தடியடி குண்டுகள் யாவையுமே-அவர்
     தாங்கிட முன்வந்து நின்றனரே.

குண்டாந் தடிக்குமே அஞ்சவில்லை-பொல்லாக்
     குண்டு வெடித்துமே ஓடவில்லை.
“இன்றேஎம் பாரத நாட்டைவிட்டு-நீங்கள்
     ஏறுவீர் கப்பலில்” என்றனரே.

“வந்த வழியிலே சென்றிடுவோம்-வேறு
     வழியில்லை. மக்கள் விழித்துவிட்டார்”
என்ற முடிவுக்கு வந்தனரே-நம்மை
     இருநூறு ஆண்டுகள் ஆண்டவர்கள்.

சிறையில் இருந்தோர் அனைவரையும்-உடன்
     திறந்த வெளியில் அனுப்பினரே.
அருமைத் தலைவர்கள் கைகளிலே-நாட்டின்
     ஆட்சியைத் தரவும் இசைந்தனரே.