நாடு பிரிந்தது! | அன்பு வழியிலே காந்திமகான்-தம் ஆயுள் முழுவதும் பாடுபட்டும் என்றும் எதிரிபோல் நாட்டினிலே-சில இந்துவும் முஸ்லீமும் சண்டையிட்டார். இந்துவும் முஸ்லீமும் ஒன்றுபட்டால்-நாங்கள் இனிய விடுதலை தருவோமென்றே அந்நிய வெள்ளையர் கூறிடவே-காந்தி அமைதியைக் காத்திடப் பாடுபட்டார். ஃ ஃ ஃ “இந்துவும் நாங்களும் ஒன்றாக இணங்கி வாழ முடியாது. சொந்தமாய் நாடு வேண்டும்” என்றார், தொடர்ந்து முஸ்லீம் லீகினரும். “இந்திய நாட்டைப் பிரித்திடுவீர். இரண்டு துண்டாய்ச் செய்திடுவீர். சொந்தமாய் நாடு கிடைத்தபின்பே தொல்லைகள் தீர்ந்திடும்” என்றனரே. | | |
|
|