பக்கம் எண் :

137


 

வெள்ளையர் வெளியேறினர்!
 

பாரத புண்ணிய பூமியினைப்
     பாகப் பிரிவினை செய்த பின்னர்,
கோரிய வண்ணம் சுதந்திரத்தைக்
     கொடுத்திட வெள்ளையர் முடிவுசெய்தார்.

அருமைத் தலைவர்கள் கைகளிலே
     ஆட்சிப் பொறுப்பினை ஒப்படைத்தே,
திரும்பினர் ஊருக்கு வெள்ளையர்கள்;
     தேசம் மகிழ்ந்திடச் செய்தனரே.

மக்களுள் மாணிக்கம் நேருஜியும்,
     மதிநுட்பம் மிக்கநம் ராஜாஜியும்,
பக்க பலமாக ராஜன்பாபு
     பட்டேலுடன் பொறுப் பேற்றனரே!