 | வெள்ளையர் வெளியேறினர்! | பாரத புண்ணிய பூமியினைப் பாகப் பிரிவினை செய்த பின்னர், கோரிய வண்ணம் சுதந்திரத்தைக் கொடுத்திட வெள்ளையர் முடிவுசெய்தார். அருமைத் தலைவர்கள் கைகளிலே ஆட்சிப் பொறுப்பினை ஒப்படைத்தே, திரும்பினர் ஊருக்கு வெள்ளையர்கள்; தேசம் மகிழ்ந்திடச் செய்தனரே. மக்களுள் மாணிக்கம் நேருஜியும், மதிநுட்பம் மிக்கநம் ராஜாஜியும், பக்க பலமாக ராஜன்பாபு பட்டேலுடன் பொறுப் பேற்றனரே! | | |
|
|