 | விடுதலை பெற்றோம் | வெள்ளையர் ஆட்சி முடிந்ததென விடுதலை நாமும் அடைந்தோமென, துள்ளிக் குதித்தனர் சிறுவரெல்லாம்; சுதந்திர நாளைக்கொண் டாடினரே. சின்னஞ் சிறுவர்கள் யாவருமே சேர்ந்தனர் பள்ளியில் ஒன்றாக. வண்ண வண்ணப்பூ, காகிதத்தால் வகைவகை யாக அலங்கரித்தார். சட்டையில் சின்னக் கொடிஅணிந்து, தாயின் மணிக்கொடி ஏற்றிவைத்து சுற்றிலும் நின்று வணங்கினரே; சுதந்திர தேவியை வாழ்த்தினரே. | | |
|
|