பக்கம் எண் :

142


 

ஜோதி மறைந்தது!
 

என்றுமே மாலை வேளைகளில்
     எங்குதான் காந்தி இருந்திடினும்,
ஒன்றாய்க் கூடிப் பிரார்த்தனைகள்
     உள்ளம் உருக நடத்திடுவார்.

*அன்று மாலை டில்லியிலே
     ஐந்து மணிசுமார் வேளையிலே
அன்புச் சுடராம் காந்தியுமே
     ஆண்ட வனைத்தொழ வந்தனராம்.

*30-1-1948