அந்தச் சமயம் காந்திமகான் அருகில் ஒருவன் மெல்லவந்தான். வந்தவன் இரண்டு கைகளினால் வணங்கி நல்லவன் போல்நடித்தான். பாயும் புலியென எண்ணவில்லை; பசுவென மக்கள் நம்பிவிட்டார். தீயவன், அங்குள்ளோர் பார்க்குமுன்னே திடுமென காந்தியைச் சுட்டுவிட்டான்! காந்தியை ஐயோ, சுட்டுவிட்டான்! கருணா மூர்த்தியைச் சுட்டுவிட்டான்! மாந்தருள் தெய்வத்தைச் சுட்டுவிட்டான்! மாபெரும் பாவி சுட்டுவிட்டான்! |  | | |
|
|