பக்கம் எண் :

143

அந்தச் சமயம் காந்திமகான்
     அருகில் ஒருவன் மெல்லவந்தான்.
வந்தவன் இரண்டு கைகளினால்
     வணங்கி நல்லவன் போல்நடித்தான்.

பாயும் புலியென எண்ணவில்லை;
     பசுவென மக்கள் நம்பிவிட்டார்.
தீயவன், அங்குள்ளோர் பார்க்குமுன்னே
     திடுமென காந்தியைச் சுட்டுவிட்டான்!

காந்தியை ஐயோ, சுட்டுவிட்டான்!
     கருணா மூர்த்தியைச் சுட்டுவிட்டான்!
மாந்தருள் தெய்வத்தைச் சுட்டுவிட்டான்!
     மாபெரும் பாவி சுட்டுவிட்டான்!