அண்ணன் அங்கே வந்தார்-“தம்பி, அருமை யான மாலை! அண்ணல் காந்தி கழுத்தில்-சூட்டி அழகு பார்ப்போம்” என்றார். அண்ணன் கையைப் பிடித்தான்-தம்பி ஆவ லாக நடந்தான். கண்ணைக் கவரும் பூங்கா-அதில் காந்தி சிலையைக் கண்டான். அண்ணன் தோளில் ஏறி-தம்பி அழகு மாலை போட்டான். கண்ணை மூடித் தொழுதான்-அந்தக் காந்தி சிலையின் முன்னே. அண்ணன் அருகில் கண்ணன்-சிலை அடியில் அமர்ந்து கொண்டான். எண்ணிப் பார்த்தான் ஏதோ-உடன் ஏக்கத் தோடு கேட்டான்; | | |
|
|