பக்கம் எண் :

20

கண்ணா, அவரின் புகழ் உடம்பைக்
     காண லாமே இன்றும்-நீ
     கலங்க வேண்டாம் என்றும்.

அண்ணா, காந்தி கதையைக் கேட்க
     ஆசை மிகவும் உண்டு-அதை
     அழகாய்ச் சொல்வாய் இன்று.

கண்ணா, உனது விருப்பம் போலக்
     காந்தி கதையைச் சொல்வேன்-உன்
     கருத்தில் பதியச் செய்வேன்.