பக்கம் எண் :

29

சிரவணன் என்றொரு மகனிருந்தான்-அவன்
     தெய்வமாய்ப் பெற்றோரைக் கருதிவந்தான்.
குருடராய்ப் பெற்றோர் இருந்துவந்தும்-எந்தக்
     குறையும் இல்லாமலே காத்துவந்தான்.

கண்ணில்லாத் தாயையும் தந்தையையும்-தோளில்
     காவடி கட்டியே தூக்கிச்சென்றான்;
புண்ணியத் தலங்களைச் சுற்றிவந்தான்-அந்தப்
     புதல்வனின் கதையைப் படித்ததுமே,

அன்னையை, தந்தையை உலகினிலே-மிக
     அருமையாய்ப் போற்றிட வேண்டுமெனும்
உண்மையைக் காந்தி அறிந்தனராம்-அதை
     உள்ளத்தில் நன்கு பதித்தனராம்.