ஆங்கில நாட்டுக்குச் சென்றவர்கள்-பலர் அருமைக் குணங்களை விட்டுவிட்டுத் தீங்கான வழிகளில் சென்றதனால்-மிகச் சீரழிந் தாரெனக் கூறினரே. அன்னை உரைத்ததைக் கேட்டதுமே-அவர் அருகினில் சென்றுநம் காந்தியுமே, “என்னைநீ நம்பிட வேண்டுமம்மா-நான் என்றும் ஒழுங்காய் இருப்பேனம்மா. மாமிசம் சாப்பிட மாட்டேனம்மா-தீய வழிகளில் செல்லவே மாட்டேனம்மா. சாமிக்குப் பொதுவாகச் சொன்னேனம்மா-இது சத்தியம், சத்தியம், சத்தியமே.” என்றதும் அன்னை மகிழ்ந்தனரே-உடன் இணங்கினர் மகனை அனுப்பிடவே. அன்னையின் அனுமதி பெற்றதுமே-காந்தி அளவில்லா ஆனந்தம் கொண்டனரே. |