பக்கம் எண் :

53

அன்னையின் அனுமதி

பெருமை மிகுந்தநல் தந்தையுமே-ஐயோ!
     பிரிந்தனர் நோயின் கொடுமையினால்.
அருமை மகனைப் படிக்கவைத்தே-நல்ல
     ஆளாக்கத் தாயுமே ஆசைப்பட்டார்.

“காந்தியைச் சீமைக்க னுப்பிடலாம்-கல்வி
     கற்றுப் பாரிஸ்டராய் வந்திடுவான்.
மாந்தரெல் லாரும் மதித்திடுவார்”-என்று
     வயதான பெரியவர் ஒருவர்சொன்னார்.

“பாங்குடன் ஆங்கிலம் கற்றிடவும்-காந்தி
     பாரிஸ்டர் பட்டம் பெற்றிடவும்
ஆங்கில நாடு செல்வதுதான்-மிக
     அழ” கென நண்பரும் கூறினரே.