என்றுநல் வரவுமே கூறினரே-ஆனால் ஏனோ முகத்தில் பொலிவே இல்லை! என்னதான் காரணம் என்பதனை-அண்ணன் இனியும் மறைக்க விரும்பவில்லை. அந்நிய நாட்டில் படிக்கையிலே-இங்கே அன்னை இறந்தனர் என்பதனை அன்றுதான் காந்தி அறிந்தனரே-உடன் ஐயோ, அதிர்ச்சி அடைந்தனரே! ‘கண்ணுக் கெட்டாத ஓர் நாட்டினிலே-சென்று கல்வி பயின்றிடும் வேளையிலே அன்னை இறந்தனர் என்பதனை-காந்தி அறிந்திடின் உள்ளம் உடைந்திடுவார்’ அண்ணனும் இப்படி எண்ணியதால்-அவர் அன்னையைப் பற்றி எழுதவில்லை. ‘கண்ணேபோல் என்னையே காக்கும் அம்மா-அன்று கப்பலில் ஏறிநான் செல்லுமுன்னர், உன்னிடம் சத்தியம் செய்தேனம்மா-அதை உறுதியாய்க் காத்துமே வந்தேனம்மா என்றுநான் யாரிடம் சொல்வேனம்மா’-என எண்ணி எண்ணிகாந்தி கண்ணீர்விட்டார். | | |
|
|