அந்தச் சமயம் காந்தியுமே-தென் ஆப்பிரிக் காவர வேண்டுமென்றே வந்தது கடிதம் அண்ணனுக்கே-உடன் மகிழ்ச்சி அடைந்தனர் காந்தியுமே ஆப்பிரிக் காவிலே ஒரு வழக்கு-அது அப்துல்லா கம்பெனி யின் வழக்கு. நாற்பதி னாயிரம் பவுன்வழக்கு-அதை நடத்திட இவரை அழைத்தனராம். கப்பலில் காந்தியும் ஏறிச்சென்றார்-மிகக் களிப்புடன் டர்பன் நகர்அடைந்தார். அப்துல்லா துறைமுகம் வந்திருந்தார்-அவர் அன்போடு காந்தியைக் கூட்டிச்சென்றார். |  | | |
|
|