பக்கம் எண் :

88

நீதிமன் றத்தில் தலைப்பாகை
     நேர்த்தியாய் அணிந்து முதல்முதலில்
சாதுவாம் காந்தி நுழைந்தனரே.
     சட்டெனச் சீறினார், நீதிபதி.

“மன்றத்தி லேதலைப் பாகைவைத்து
     வருவதை நானும் அனுமதியேன்.
இந்த விநாடியே பாகையைநீர்
     எடுத்திடு வீர்” என்றார் நீதிபதி.

“இந்தியர் அணிந்திடும் பாகைதனை
     எடுக்கவே மாட்டேன்” எனஉரைத்தே
அந்த இடம்விட்டு காந்தியுமே
     ஆத்திர மாக வெளியில்வந்தார்.

வெள்ளையர் கொடுமையை முதல்முதலில்
     வீரமாய் காந்தி எதிர்த்தனரே.
உள்ளம் வெதும்பினர் வெள்ளையர்கள்.
     உவகை அடைந்தனர் இந்தியர்கள்.