பக்கம் எண் :

89

வெளியில் தள்ளினர்
 

டர்பன் நகரில் முதல் வகுப்புச்
     சீட்டு வாங்கியே
ரயிலில் ஏறிப் பயணம் செய்தார்
     நமது காந்தியே.
நிற்கும் சமயம் வழியில் உள்ள
     நிலையம் ஒன்றிலே
நிமிர்ந்து நடந்து வந்தான் ஒருவன்;
     வெள்ளைக் காரனே!

அந்த வெள்ளைக் காரன் காந்தி
     இருந்த பெட்டியில்
அடிஎ டுத்து வைத்த வுடனே
     கண்டான் காந்தியை.
“இந்தி யன்நீ முதல்வ குப்பில்
     ஏற லாகுமோ?
இறங்கிச் சாமான் வண்டி ஒன்றில்
     ஏறு” என்றனன்.