பக்கம் எண் :

95


 

முதல் சத்தியாக்கிரகம்
 

கொடுமைகள் எல்லையை மீறிடவே
     குமுறி எழுந்தனர் காந்தியுமே.
திடமாய் அவருடன் பற்பலபேர்
     சேர்ந்து கிளம்பிட லாயினரே.

“அடையாளச் சீட்டுப் பெறுவதில்லை.
     யாரும்கை ரேகை வைப்பதில்லை.
தடைகளை மீறுவோம்” என்றனரே;
     தலைவராய் காந்தியைக் கொண்டனரே.