பக்கம் எண் :

96

சத்தியப் போரை காந்தியுமே
     சாந்த முறையில் துவக்கினரே.
சத்தியம், உறுதி சேர்ந்ததனால்
     ‘சத்தியாக் கிரகம்’ என்றனரே.

சத்தியாக் கிரகம் செய்துவந்த
     தலைவராம் காந்தியின் பின்னாலே,
பத்தா யிரத்துக்கும் மேலானோர்
     படையெனத் திரண்டு வந்தனரே.

காந்தியைச் சர்க்கார் பிடித்தனரே;
     கைதியாய்ச் சிறையில் அடைத்தனரே.
சேர்ந்து பலருமே காந்தியுடன்,
     சிறையினில் வாடி வதங்கினரே.

இந்தியப் பெண்களும் அஞ்சவில்லை.
     எதிர்த்துச் சிறைக்குமே சென்றனரே.
நந்தமிழ் நாட்டு வள்ளியம்மை
     நல்லவ ளும்அதில் சேர்ந்தனளே.

நேரிய வழியில் போர்புரிந்தார்;
     நீதியைக் காத்திடப் போர்புரிந்தார்.
சோர்வடை யாமலே போர்புரிந்தார்,
     தூயவர் காந்தி தலைமையிலே.