பக்கம் எண் :

சொந்தக் கையிலே சூடு
போட்டுக் கொண்டவர் ! 


     அவனோ மிகவும் சிறிய பையன், அவன் கையிலிருந்த சிலந்தியோ மிகவும்
பெரிதாயிருந்தது. ஏதேதோ மருந்துகள் போட்டுப் பார்த்தார்கள் ;  யார் யாரோ
வைத்தியம் செய்து பார்த்தார்கள். சிலந்தி அமுங்கவுமில்லை ;  பழுத்து உடையவுமில்லை.

     சிலந்தி அப்படியே இருந்தாலும் குறைவில்லை ;  நாளுக்கு நாள் அது
பருத்துக்கொண்டே வந்தது. வலியும் அதிகரித்தது. ‘விண், விண்’ என்று தெறித்தது. பாவம்,
அந்தப் பையனால் வலியைப் பொறுக்க முடியவில்லை.

     அவன் தைரியமான பையன் தான். ஆனாலும், பல்லைக் கடித்துக் கொண்டு
எத்தனை நாளைக்குத்