30 | பெரியோர் வாழ்விலே | தான் இருக்க முடியும்? ஓடி ஆடி விளையாட முடியவில்லை ; இரவில் கொஞ்ச நேரம்கூடத் தூங்க முடியவில்லை. எந்த நேரமும் வலி இருந்து கொண்டேயிருந்தது.
ஒரு நாள், அந்த வீதியில் இருந்த பெரியவர் ஒருவர் அந்தப் பையன் வீட்டுக்கு வந்தார். அவர் பையன் படும் துன்பத்தைக் கண்டார். “சூடு போட்டால், இது குணமாகி விடும்” என்று அவர் கூறினார்.
உடனே அப்பையன், அம்மாவைப் பார்த்து “அம்மா, தினந்தோறும் என்னால் இப்படித் துன்பப்பட முடியாது. சூடு போட்டால் குணமாகிவிடும் என்கிறார்களே, சூடு போடம்மா” என்று கெஞ்சினான்.
“ஐயையோ ! சூடு போட்டால் சுகமாகவா இருக்கும்? அப்போது என்ன வலி வலிக்கும் ! வேண்டாம் கண்ணே, வேறு ஏதாவது மருந்து போடலாம்” என்றாள் அம்மா.
“போம்மா, நீதான் எத்தனையோ மருந்துகள் போட்டுப் பார்த்து விட்டாயே ! இதற்குச் சூடுதான் போடவேண்டும். சூடு போடும்போது எவ்வளவு வலி இருந்தாலும் பரவாயில்லை. பிறகு, சுகமாக இருக்குமல்லவா?” என்று பிடிவாதமாகக் கூறினான்.
அம்மா இணங்கவில்லை. ‘சரி அம்மாவிடம் சொன்னால் இப்படித்தான் யோசிப்பாள். நாமே இதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று எண்ணினான், அவன்.
நேராக அந்த ஊரிலிருந்த ஒரு மருத்துவரிடம் சென்றான். அவரிடம் தன் துன்பத்தை எடுத்துரைத்துச் சூடு போடும்படி வேண்டினான். |
|
|
| |