மிகவும் பயந்தான். விவேகானந்தரையும் விளையாட வேண்டாமென்று கூறித் தடுத்தான்.
அப்போது விவேகானந்தர், “அட பயங்கொள்ளி ! அந்த பிரம்ம ராட்சகன் என்னை என்னதான் செய்கிறான் என்று பார்ப்போமே ! இவ்வளவு நாட்களாக நாம் இங்கு விளையாடிக்கொண்டு தானே இருந்தோம். அந்தக் கிழவர் சொன்னது உண்மையாக இருந்தால், நம் கழுத்தெல்லாம் எப்போதோ ஒடிந்து போயிருக்க வேண்டுமே !” என்று கூறிவிட்டுச் சிரித்தார். சிரித்துக்கொண்டே மரத்தில் ஏறித் தலைகீழாகத் தொங்கி விளையாடலானார் ! * * * ஆள்வார் சமஸ்தானத்தில் ஒரு திவான் இருந்தார். அவருக்குச் சுவாமி விவேகானந்தரிடம் அளவற்ற பக்தி. அவர் மாளிகைக்கு ஒரு முறை விவேகானந்தர் எழுந்தருளி இருந்தார். அப்போது, அவரைக் காண ஆள்வார் மகாராஜா வந்தார். வந்தவர் விவேகானந்தருடன் பல செய்திகளைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தார்.
அப்போது அவர், “ஏன் சுவாமி, கல்லையும் மண்ணையும் வைத்துக் கடவுள் என்று மக்கள் வணங்குகிறார்களே ! அது சரி என்று எனக்குத் தோன்றவில்லை. இப்படி நான் சொல்லுவதால் எனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ?” என்று சிறிது கிண்டலாகக் கேட்டார்.
விவேகானந்தர் அதற்கு ஒன்றும் பதில் கூறவில்லை. சிறிது நேரம் சென்றது. விவேகானந்தர் அங்கே சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு படத்தைப் |